Saturday, September 12, 2009

சக்கரவர்த்தி நான்!

கல்லூரியில் முதல்நாள்
உன் முதல்பார்வை
என் முதல்காதல்
கண்டதும் காதலன கொச்சைபடுத்த வேண்டாம்!
அவள் பார்வை என் காதலின் பிள்ளையார்சுழி!

என் பகல் உன் பார்வைக்காய்
காத்துக்கிடகின்றன!
என் இரவு மறுநாள் விடியலுக்காய்
உறக்கம் தொலைக்கின்றன!

என் இதயம் உதிரத்தோடு
உன் உணர்வுகளையும் கலந்து
என் உடலெங்கும் சுழற்றுகின்றது.

என் உதிரம் அது
ஏயும் பியும் மட்டுமல்ல நீயும்தான்!

என்முகம் உன் மூளைக்குகூட எட்டுவதில்லை
என் ஆறாம் அறிவோ
உன்னை தவிர வேறு எதையும் தேடுவதில்லை!

வருடங்கள் தவம் செய்துவிட்டு
வரம் கேட்க மறந்த பக்தன் நான்!

என்செய்ய வரத்தைவிட சுகமானது
இந்த கலையாத தவம்!

இறுதியில் நீ போய்வருகின்றேன் என்றதே
பொய் என்று அறியாமல்
சந்தோஷப்படுகின்றது மனது!

அறியாமலே நீ என்மீது
போர்தொடுத்தாய்
ஆனால் நான்தானே சிறைபிடித்தேன்
உன்னை என்மனதில்!

இனிமுதல் கைதிக்கு சேவைசெய்யும்
முதல் சக்கரவர்த்தி நான்!


_விஷ்ணு

3 comments:

ராமகிருஷ்ணன் த said...

Nice Please continue

ராமகிருஷ்ணன் த said...

என்செய்ய வரத்தைவிட சுகமானது
இந்த கலையாத தவம்!

beautiful

ராமகிருஷ்ணன் த said...

அடுத்த படைப்பு எங்கே என்று
புரவலனாய் கைகள் நீட்டுகின்றேன்