வெளிநாடு செல்கின்றேன் நான்!
நீ என்னை வழியனுப்புகின்றாய்
கண்ணீர் தடுத்து
விழிதைத்து அனுப்புகின்றாய்!
தனியாய் போகின்றேன் நான்
என் கண்களுக்கு தனிமையில்
நிற்பது நீதான்!
தைரியம் நடித்து
என்னை வழியனுப்ப வந்தாய்
இரண்டடி நடந்து நான் திரும்பிபார்க்கையில்
வேஷம் கலைகின்றாய்!
உன் உரக்கம் தொலைத்து
என்னை கனவாய் வளர்த்தாய்
இன்று என் கனவை வளர்க்க
வழியனுப்புகின்றாய்!
நான் அறிவேன்!
உன் சுறுசுறுப்பான விடியலும்,
சாயங்கால அரட்டையும்,
திபாவளியும்,பொங்கலும்,
நீ என்னோடு வழியனுப்புகின்றாய்!
போய்வருகின்றேன்!
-விஷ்ணு
Saturday, September 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment