நான் படைத்த உன்னை
என் பெயரை சொல்லியே அழிப்பது
நான் அல்ல
அது நீதான்!
என் பெயரையே
இரு புறமும் சொல்லி
கொல்லவும் சாகவும் செய்யும்
முட்டாள் மனிதா
இன்று நானே சொல்கின்றேன்
செவிதிறந்து கேட்டுக்கொள்
நீ தேடும் கடவுள் எங்குமில்லை!
இன்று முதல் நானும் ஒரு நாத்திகன்!
எந்த மிருகத்திற்குள்ளும்
மனிதன் இல்லை!
ஒரு மனிதனுக்குள்
எத்தனை மிருகங்கள்
எந்த மிருகத்திற்கும் இல்லாத
மதமும் உள் இருக்கின்றது!
மதங்களின் பெயரில்
மரித்துவிட்டு
என்னை பார்க்காதீற்கள்
பழிச்சொல்லாதீற்கள்!
நான் மனிதனைதான் படைத்தேன்
மதங்களை அல்ல!
உறக்க சொல்கின்றேன்
மாக்களே
செவிதிறந்து கேட்டுக்கொள்
இன்று முதல் நான் கடவுளே இல்லை!
கடவுள் இல்லாத மதம்
உனக்கு எதற்கு
இன்று முதல் நானும் ஒரு நாத்திகன்!
-விஷ்னு
Sunday, February 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment